Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடியில் மிதமான மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

மார்ச் 09, 2021 02:22

தூத்துக்குடி : பல்வேறு பகுதிகளில் பெய்த  மிதமான மழையால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மழைக்காலம் முடிந்து கடந்த ஒரு மாதமாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று தூத்துக்குடி பகுதியில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி பேருந்து நிலையம், பிரைன் நகர், அண்ணா நகர், சிவன் கோவில், மார்க்கெட், உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில்  பரவலாக சுமார் அரை மணி நேரம் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில் தற்போது மழை பெய்து வருவது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தலைப்புச்செய்திகள்